என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி அரசு-தனியார் பள்ளிகள் திறப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
Byமாலை மலர்5 Jun 2021 3:15 AM GMT (Updated: 5 Jun 2021 3:15 AM GMT)
கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி அரசு-தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவு, அரசு பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் புதிய கல்வி ஆண்டு வழக்கமாக கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அதாவது 2021-22-ம் கல்வி ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் பருவ காலம் ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 9-ந் தேதி வரையும், 2-வது பருவ காலம் அக்டோபர் 21-ந் தேதி தொடங்கி 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையும் நடைபெறும்.
முதல் பருவத்தில் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் மாதம் 10-ந் தேதி தொடங்கி அதே மாதம் 20-ந் தேதி 11 நாட்கள் விடுமுறை விடப்படும். அடுத்த ஆண்டு (2022) கோடை விடுமுறை மே மாதம் 1-ந் தேதி தொடங்கி அதே மாதம் 28-ந் தேதி விடப்படும். பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவு, அரசு பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் புதிய கல்வி ஆண்டு வழக்கமாக கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அதாவது 2021-22-ம் கல்வி ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் பருவ காலம் ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 9-ந் தேதி வரையும், 2-வது பருவ காலம் அக்டோபர் 21-ந் தேதி தொடங்கி 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையும் நடைபெறும்.
முதல் பருவத்தில் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் மாதம் 10-ந் தேதி தொடங்கி அதே மாதம் 20-ந் தேதி 11 நாட்கள் விடுமுறை விடப்படும். அடுத்த ஆண்டு (2022) கோடை விடுமுறை மே மாதம் 1-ந் தேதி தொடங்கி அதே மாதம் 28-ந் தேதி விடப்படும். பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவு, அரசு பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X