என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
Byமாலை மலர்3 Jun 2021 11:55 PM GMT (Updated: 3 Jun 2021 11:55 PM GMT)
ஊரடங்கு நிறைவடைந்தபின் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறிய மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் வருகிற 15-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில் பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் தினமும் 3 மணி நேரம் செயல்படலாம் என தெரிவித்தார். அந்தவகையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறினார்.
இதைப்போல ஊரடங்கு நிறைவடைந்தபின் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறிய மம்தா பானர்ஜி, மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்கு உதவுமாறு வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கேட்டுக்கொண்டார்.ஒட்டுமொத்த மக்களுக்கும் மாநில அரசே ஒரு கை கொண்டு தடுப்பூசி போட முடியாது எனக்கூறிய மம்தா, எனவே இந்த பணிகளுக்கு முன்வருமாறு வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் திறந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக முதல்-மந்திரி தெரிவித்தாலும், எப்போது முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X