என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் வரை நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்3 Jun 2021 10:23 AM GMT (Updated: 3 Jun 2021 10:23 AM GMT)
கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விதிமுறையை மாற்றி ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் (டெட்) ஒருமுறை பெற்றால் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் இன்று அறிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறையானது, 2011 முதல் ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் எனவும் அவர் கூறினார்.
கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய மந்திரி கூறி உள்ளார்.
மேலும் காலாவதியான சான்றிதழ்களை புதுப்பிக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X