search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவுக்கு பலி
    X
    கொரோனாவுக்கு பலி

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 30 ஆயிரத்தை தாண்டியது

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது கவனத்தில் கொள்ளத்தக்கது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 45 ஆயிரத்து 923 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 16,387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 35 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 463 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 21,199 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில்
    கொரோனா
    வில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 12 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்து 24 ஆக குறைந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 4,095 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகல்கோட்டையில் 262 பேர், பல்லாரியில் 525 பேர், பெலகாவியில் 1,006 பேர், பெங்களூரு புறநகரில் 164 பேர், பீதரில் 23 பேர், சாம்ராஜ்நகரில் 258 பேர், சிக்பள்ளாப்பூரில் 360 பேர், சிக்கமகளூருவில் 214 பேர், சித்ரதுர்காவில் 483 பேர், தட்சிண கன்னடாவில் 618 பேர், தாவணகெரேயில் 535 பேர், தார்வாரில் 245 பேர், கதக்கில் 285 பேர், ஹாசனில் 520 பேர், ஹாவேரியில் 79 பேர், கலபுரகியில் 117 பேர், குடகில் 298 பேர், கோலாரில் 389 பேர், கொப்பலில் 295 பேர், மண்டியாவில் 711 பேர், மைசூருவில் 1,687 பேர், ராய்ச்சூரில் 249 பேர், ராமநகரில் 165 பேர், சிவமொக்காவில் 548 பேர், துமகூருவில் 882 பேர், உடுப்பியில் 636 பேர், உத்தரகன்னடாவில் 456 பேர், விஜயாப்புராவில் 166 பேர், யாதகிரியில் 116 பேருக்கு
    கொரோனா
    பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 307 பேரும், பாகல்கோட்டையில் ஒருவரும், பல்லாரியில் 8 பேரும், பெலகாவியில் 17 பேரும், பெங்களூரு புறநகரில் 12 பேரும், சாம்ராஜ்நகரில் 4 பேரும், சிக்பள்ளாப்பூரில் 8 பேரும், சிக்கமகளூருவில் 2 பேரும், சித்ரதுர்காவில் 3 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், தாவணகெரேயில் 5 பேரும், தார்வாரில் 5 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 12 பேரும், ஹாவேரியில் 6 பேரும், கலபுரகியில் 4 பேரும், குடகில் ஒருவரும், கோலாரில் 2 பேரும், கொப்பலில் 7 பேரும், மண்டியாவில் 2 பேரும், மைசூருவில் 12 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் ஒருவரும், சிவமொக்காவில் 10 பேரும், துமகூருவில் 7 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 9 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும் இறந்தனர். பீதர், யாதகிரியில் இறப்பு இல்லை என மொத்தம் 463 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது கவனத்தில் கொள்ளத்தக்கது.
    Next Story
    ×