என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்2 Jun 2021 1:46 AM GMT (Updated: 2 Jun 2021 1:46 AM GMT)
தலைநகர் மும்பையில் புதிதாக 831 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 82 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை :
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 14 ஆயிரத்து 123 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக மாநிலத்தில் கடந்த மார்ச் 10-ந் தேதி 13 ஆயிரத்து 659 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு தற்போது பாதிப்பு 15 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது.
இதுவரை மாநிலத்தில் 57 லட்சத்து 61 ஆயிரத்து 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 54 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 35 ஆயிரத்து 949 பேர் குணமாகினர். இதனால் தற்போது மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 681 ஆக குறைந்து உள்ளது. மாநிலத்தில் மேலும் 477 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 96 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 831 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 82 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 664 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 17 ஆயிரத்து 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல நகரில் மேலும் 23 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 14 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 95 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 453 நாட்களாக உள்ளது.
தாராவியில் நேற்று புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அங்கு 17 பேர் மட்டுமே வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 14 ஆயிரத்து 123 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக மாநிலத்தில் கடந்த மார்ச் 10-ந் தேதி 13 ஆயிரத்து 659 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு தற்போது பாதிப்பு 15 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது.
இதுவரை மாநிலத்தில் 57 லட்சத்து 61 ஆயிரத்து 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 54 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 35 ஆயிரத்து 949 பேர் குணமாகினர். இதனால் தற்போது மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 681 ஆக குறைந்து உள்ளது. மாநிலத்தில் மேலும் 477 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 96 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 831 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 82 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 664 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 17 ஆயிரத்து 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல நகரில் மேலும் 23 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 14 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 95 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 453 நாட்களாக உள்ளது.
தாராவியில் நேற்று புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அங்கு 17 பேர் மட்டுமே வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X