என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
Byமாலை மலர்30 May 2021 12:39 AM GMT (Updated: 30 May 2021 12:39 AM GMT)
உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் இரும்பு கம்பி ஒன்றில் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீதாபூர்:
உத்தரபிரசேதத்தின் சீதாபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹனுமன்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த திருமண சடங்குகள் நள்ளிரவையும் கடந்து நடந்து கொண்டிருந்தது.
இந்த சடங்கின்போது அங்கு பலத்த இடி-மின்னல் காணப்பட்டது. இதில் மின்னல் தாக்கியதில் திருமண பந்தல் சரிந்தது. அப்போது பந்தலில் இருந்த இரும்பு கம்பி ஒன்று, அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியது.
இதில் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில், 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அவர்கள் உடலில் தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் 4 பேர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரசேதத்தின் சீதாபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹனுமன்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த திருமண சடங்குகள் நள்ளிரவையும் கடந்து நடந்து கொண்டிருந்தது.
இந்த சடங்கின்போது அங்கு பலத்த இடி-மின்னல் காணப்பட்டது. இதில் மின்னல் தாக்கியதில் திருமண பந்தல் சரிந்தது. அப்போது பந்தலில் இருந்த இரும்பு கம்பி ஒன்று, அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியது.
இதில் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில், 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அவர்கள் உடலில் தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் 4 பேர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X