என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலிவான அரசியலுக்கு இது நேரம் அல்ல : மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி வழங்க வேண்டும் - கெஜ்ரிவால்
Byமாலை மலர்29 May 2021 10:28 PM GMT (Updated: 29 May 2021 10:28 PM GMT)
தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில் மாநிலங்களுக்காக மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி சத்ரசால் அரங்கத்தில் இயங்கி வரும் தடு்ப்பூசி மையத்தை நேற்று பார்வையிட்ட அவர், தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தடுப்பூசி விவகாரத்தில் எங்கே அரசியல் செய்யப்படுகிறது? மக்களுக்கு தடுப்பூசி தேவை. அது எங்கே கிடைக்கும் என்று மத்திய அரசு கூற வேண்டும். தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம்’ என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபடவோ, யாரையும் குற்றம் சொல்லவோ இது நேரம் இல்லை எனக்கூறிய கெஜ்ரிவால், தடுப்பூசி போடுவதே இந்த பிரச்சினைக்கான தீர்வு எனவும் குறிப்பிட்டார். எனவே தடுப்பூசி மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 900 ஆக குறைந்திருப்பதாக கூறிய அவர், புதிய பாதிப்புகள் இப்படி குறைந்து கொண்டே சென்றால், தலைநகரில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று (நேற்று முன்தினம்) வரை மாநிலத்தில் 450 கருப்பு பூஞ்சை நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில் மாநிலங்களுக்காக மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி சத்ரசால் அரங்கத்தில் இயங்கி வரும் தடு்ப்பூசி மையத்தை நேற்று பார்வையிட்ட அவர், தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தடுப்பூசி விவகாரத்தில் எங்கே அரசியல் செய்யப்படுகிறது? மக்களுக்கு தடுப்பூசி தேவை. அது எங்கே கிடைக்கும் என்று மத்திய அரசு கூற வேண்டும். தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம்’ என தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 900 ஆக குறைந்திருப்பதாக கூறிய அவர், புதிய பாதிப்புகள் இப்படி குறைந்து கொண்டே சென்றால், தலைநகரில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று (நேற்று முன்தினம்) வரை மாநிலத்தில் 450 கருப்பு பூஞ்சை நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X