search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

    கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தால், மே 31-ந் தேதி முதல் கட்டம் கட்டமாக ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா 2-வது அலையின் உச்சத்தைக் கண்ட தலைநகர் டெல்லியில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்லத் தணிந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தால், மே 31-ந் தேதி முதல் கட்டம் கட்டமாக ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.

    கோப்புப்படம்


    ‘ஊரடங்கு தொடர்பாக நான் பலருடன் ஆலோசித்தேன். அதை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பதற்கு ஆதரவாகவே பொதுக்கருத்து இருந்தது. எனவே மே 31-ந் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கடும் போராட்டத்துக்குப் பின் பெறப்பட்ட பலன்களை இழந்துவிடாமல் இருக்க இந்த ஊரடங்கு அவசியம். என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    Next Story
    ×