search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
    X
    முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

    கொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - மத்திய பிரதேச அரசு உத்தரவு

    மத்திய பிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    போபால்:

    மத்திய பிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து மத்தியபிரதேசத்தில் கொரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.

    கோப்புப்படம்


    மேலும் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×