என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி: கெஜ்ரிவால் அறிவிப்பு
Byமாலை மலர்18 May 2021 11:34 AM GMT
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இன்றைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 22,111 பேர் உயிரிழந்துள்ளனர். 50,863 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14,02,873 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
1. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
2. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவராக இருந்தால் மாதந்தோறும் 2500 ரூபாய் பென்சனாக வழங்கப்படும். நிதியுதவியும் உண்டு.
3. கணவர் இறந்தால் மனைவிக்கு பென்சன், மனைவி இறந்தால் கணவர் பென்சன் பெறலாம். திருமணம் ஆகாத நபர் இறந்திருந்தால் பெற்றோர் பென்சனை பெறமுடியும்.
4. ஏற்கனவே பெற்றோர்களில் ஒருவர் இறந்து, தற்போது கொரோனா தொற்றால் மற்றொருவர் இறந்து குழந்தை தவித்தால், அந்த குழந்தை 25 வயது ஆகும் வரை 2500 ரூபாயை பெற முடியும். அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X