search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 38,603 பேருக்கு கொரோனா: பெங்களூருவில் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

    கர்நாடகத்தில் கொரோனா ஏறுமுகம், இறங்குமுகத்திற்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்ததே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 97 ஆயிரத்து 236 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 38 ஆயிரத்து 603 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 42 ஆயிரத்து 65 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 476 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 34 ஆயிரத்து 634 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 16 லட்சத்து 16 ஆயிரத்து 92 பேர் மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 639 ஆக உள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 13 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகல்கோட்டையில் 305 பேர், பல்லாரியில் 2 ஆயிரத்து 322 பேர், பெலகாவியில் 1,748 பேர், பெங்களூரு புறநகரில் 426 பேர், பீதரில் 172 பேர், சாம்ராஜ்நகரில் 516 பேர், சிக்பள்ளாப்பூரில் 799 பேர், சிக்கமகளூருவில் 732 பேர், சித்ரதுர்காவில் 407 பேர், தட்சிண கன்னடாவில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாவணகெரேயில் 747 பேர், தார்வாரில் 972 பேர், கதக்கில் 475 பேர், ஹாசனில் 2 ஆயிரத்து 324 பேர், ஹாவேரியில் 142 பேர், கலபுரகியில் 695 பேர், குடகில் 442 பேர், கோலாரில் 713 பேர், கொப்பலில் 470 பேர், மண்டியாவில் 1,087 பேர், மைசூருவில் 1,980 பேர், ராய்ச்சூரில் 562 பேர், ராமநகரில் 397 பேர், சிவமொக்காவில் 1,322 பேர், துமகூருவில் 1,915 பேர், உடுப்பியில் 897 பேர், உத்தரகன்னடாவில் 1,288 பேர், விஜயாப்புராவில் 233 பேர், யாதகிரியில் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 239 பேரும், பல்லாரியில் 17 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ்நகரில் 8 பேரும், சிக்பள்ளாப்பூரில் 6 பேரும், சிக்கமகளூருவில் 3 பேரும், சித்ரதுர்காவில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 6 பேரும், தாவணகெரேயில் 3 பேரும், தார்வாரில் 5 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 29 பேரும், ஹாவேரியில் 10 பேரும், கலபுரகியில் 15 பேரும், குடகில் 4 பேரும், கோலாரில் 8 பேரும், கொப்பலில் 2 பேரும், மண்டியாவில் 10 பேரும், மைசூருவில் 5 பேரும், ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 6 பேரும், சிவமொக்காவில் 15 பேரும், துமகூருவில் 14 பேரும், உடுப்பியில் 5 பேரும், உத்தரகன்னடாவில் 15 பேரும், விஜயாப்புராவில் 9 பேரும், யாதகிரியில் 6 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 476 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 31 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் நேற்று திடீரென அதிகரித்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    அதேபோல் தலைநகர் பெங்களூருவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கிய பாதிப்பு, நேற்று அதிகரித்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா ஏறுமுகம், இறங்குமுகத்திற்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்ததே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    கடந்த வாரம் வரை தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1.75 லட்சம் என்ற அளவில் இருந்த நிலையில், அது தற்போது 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×