என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வென்டிலேட்டரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: தேவேந்திர பட்னாவிஸ்
Byமாலை மலர்18 May 2021 3:03 AM GMT (Updated: 18 May 2021 3:03 AM GMT)
அவுரங்காபாத்தில் பழுதானதாக கூறப்படும் வென்டிலேட்டர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
அவுரங்காபாத் :
அவுரங்காபாத் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசால் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பல வென்டிலேட்டர்கள் முறையாக இயங்கவில்லை என செய்தி வெளியானது.
இந்த தகவல் ஆதாரம் இல்லாதது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் அவுரங்காபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பிரதமரின் “பி.எம். கேர்ஸ் நிதியில்” இருந்து மகாராஷ்ராவிற்கு சுமார் 5 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலானவை கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. எனவே அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றப்படவேண்டும். இதை வைத்து அரசியல் விளையாட வேண்டிய அவசியம் இல்லை.
கருப்பு பூஞ்சை பாதிப்பு முதன்முதலில் மராட்டியத்தில் கண்டறியப்பட்டதால், மாநிலத்திற்கு தேவையான ஊசி மருந்துகளை சரியான நேரத்தில் வாங்க முடிந்தது. இதேநேரம் நாட்டின் பிற பகுதிகளில் இந்த மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நான் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களை தொடர்புகொண்டு பேசிய பின்னர் தான் அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவுரங்காபாத் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசால் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பல வென்டிலேட்டர்கள் முறையாக இயங்கவில்லை என செய்தி வெளியானது.
இந்த தகவல் ஆதாரம் இல்லாதது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் அவுரங்காபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பிரதமரின் “பி.எம். கேர்ஸ் நிதியில்” இருந்து மகாராஷ்ராவிற்கு சுமார் 5 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலானவை கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. எனவே அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றப்படவேண்டும். இதை வைத்து அரசியல் விளையாட வேண்டிய அவசியம் இல்லை.
கருப்பு பூஞ்சை பாதிப்பு முதன்முதலில் மராட்டியத்தில் கண்டறியப்பட்டதால், மாநிலத்திற்கு தேவையான ஊசி மருந்துகளை சரியான நேரத்தில் வாங்க முடிந்தது. இதேநேரம் நாட்டின் பிற பகுதிகளில் இந்த மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நான் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களை தொடர்புகொண்டு பேசிய பின்னர் தான் அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X