என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை ரத்து - புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது
Byமாலை மலர்18 May 2021 12:34 AM GMT (Updated: 18 May 2021 12:34 AM GMT)
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய இடம்பெற்றிருந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய இடம்பெற்றிருந்தது. குறிப்பாக தொடக்க கட்ட தொற்றில் இருந்த நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்காக கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா தானம் பெற்று கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது.
ஆனால் இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கூடிய ஐ.சி.எம்.ஆர்-ன் சிறப்பு குழுவினர் இது குறித்து விவாதித்தனர். பின்னர் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை போதிய பலன் அளிக்காததால், கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து இதை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.
ஐ.சி.எம்.ஆர்-ன் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு பிளாஸ்மா சிகிச்சையை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை நேற்று வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய இடம்பெற்றிருந்தது. குறிப்பாக தொடக்க கட்ட தொற்றில் இருந்த நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்காக கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா தானம் பெற்று கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது.
ஆனால் இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
ஐ.சி.எம்.ஆர்-ன் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு பிளாஸ்மா சிகிச்சையை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை நேற்று வெளியிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X