என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் வினியோகம்
Byமாலை மலர்17 May 2021 12:09 AM GMT (Updated: 17 May 2021 12:09 AM GMT)
கொரோனா நோயாளிகளுக்கு உயிர்மூச்சு அளிக்கும் ஆக்சிஜனை நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எடுத்துச் சென்று வருகின்றன
புதுடெல்லி:
கொரோனா நோயாளிகளுக்கு உயிர்மூச்சு அளிக்கும் ஆக்சிஜனை நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எடுத்துச் சென்று வருகின்றன.அந்தவகையில், கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல், பல்வேறு மாநிலங்களுக்கு 590 டேங்கர்கள் மூலம் 9 ஆயிரத்து 440 டன்னுக்கு அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் கிடைத்து இருக்கிறது.
இதுவரை சுமார் 150 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. 12 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 55 டேங்கர்களில் 970 டன்னுக்கு அதிகமான ஆக்சிஜனை எடுத்துச் சென்றன. தேசிய தலைநகரப் பகுதிக்கு மட்டும் 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன், ரெயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் தினமும் 800 டன் ஆக்சிஜனை இந்த ரெயில்கள் வினியோகம் செய்திருக்கின்றன.
தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெரிதும் கைகொடுத்திருக்கின்றன. கேரள மாநிலத்துக்கான முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் 118 டன் ஆக்சிஜனை கொண்டு சென்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரபிரதேசம் சுமார் 2 ஆயிரத்து 525 டன் ஆக்சிஜனை ரெயில்கள் மூலம் பெற்றிருக்கிறது.
ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு உயிர்மூச்சு அளிக்கும் ஆக்சிஜனை நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எடுத்துச் சென்று வருகின்றன.அந்தவகையில், கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல், பல்வேறு மாநிலங்களுக்கு 590 டேங்கர்கள் மூலம் 9 ஆயிரத்து 440 டன்னுக்கு அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் கிடைத்து இருக்கிறது.
இதுவரை சுமார் 150 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. 12 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 55 டேங்கர்களில் 970 டன்னுக்கு அதிகமான ஆக்சிஜனை எடுத்துச் சென்றன. தேசிய தலைநகரப் பகுதிக்கு மட்டும் 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன், ரெயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் தினமும் 800 டன் ஆக்சிஜனை இந்த ரெயில்கள் வினியோகம் செய்திருக்கின்றன.
தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெரிதும் கைகொடுத்திருக்கின்றன. கேரள மாநிலத்துக்கான முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் 118 டன் ஆக்சிஜனை கொண்டு சென்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரபிரதேசம் சுமார் 2 ஆயிரத்து 525 டன் ஆக்சிஜனை ரெயில்கள் மூலம் பெற்றிருக்கிறது.
ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X