என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும் - மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை
Byமாலை மலர்16 May 2021 7:19 PM GMT (Updated: 16 May 2021 7:19 PM GMT)
முழு ஊரடங்கு போட்டுள்ள மாநிலங்களில் தகுதி வாய்ந்த ஏழை எளிய மக்களுக்கு அவர்தம் வங்கிக்கணக்குகளில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்
புதுடெல்லி:
பிரதமர் மோடிக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு போட்டிருப்பதால் ஏழைகள், தினக்கூலிகள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி இருப்பதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில், மேற்கு வங்காளம் உள்ளிட்ட முழு ஊரடங்கு போட்டுள்ள மாநிலங்களில் தகுதி வாய்ந்த ஏழை எளிய மக்களுக்கு அவர்தம் வங்கிக்கணக்குகளில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது கோடிக்கணக்கான ஏழை மக்களின் துன்பங்களைத்தணிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த கோரிக்கையை கடந்த ஆண்டு தேசிய அளவில் ஊரடங்கு போட்ட காலம்தொட்டு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு போட்டிருப்பதால் ஏழைகள், தினக்கூலிகள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி இருப்பதாக கூறி உள்ளார்.
இது கோடிக்கணக்கான ஏழை மக்களின் துன்பங்களைத்தணிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த கோரிக்கையை கடந்த ஆண்டு தேசிய அளவில் ஊரடங்கு போட்ட காலம்தொட்டு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X