என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகம் உள்ள மாநிலங்கள்
Byமாலை மலர்15 May 2021 11:05 AM GMT (Updated: 15 May 2021 11:05 AM GMT)
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறினார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 36,73,802 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். 8 மாநிலங்களில் 50000 முதல் ஒரு லட்சம் நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50000-க்கும் குறைவாக உள்ளனர்.
புதிய தொற்று அதிக அளவில் பதிவான மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X