search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரளாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் நர்சிடம் ஆபாசமாக பேசிய கைதி - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கேரளாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நர்சிடம் ஆபாசமாக பேசிய கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு நோய் பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை தவிர குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கும், சிறையில் அடைக்கப்படும் முன்பு அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.

    இதில் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த அகில் என்பவரை போலீசார் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்தனர். அவரை சிறையில் அடைக்கும் முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் திருப்புணித்துறாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்த்தனர்.

    கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட அகில், அங்கு பணிபுரிந்த நர்சு ஒருவரிடம் ஆபாசமாக பேசினார். மேலும் அவரிடம் தகாத முறையிலும் நடந்து கொண்டார்.

    இது பற்றி நர்சு, சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டார். அவர்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார், அகில் மீது நர்சிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் நர்சுகள் மற்றும் சுகாதாரதுறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×