என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு 8வது தவணை நிதியுதவி- பிரதமர் மோடி வழங்கினார்
Byமாலை மலர்14 May 2021 7:52 AM GMT (Updated: 14 May 2021 7:52 AM GMT)
அக்சய திரிதியை புனித நாளான இன்று, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.19000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது.
அவ்வகையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 8-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார். இதன்மூலம் விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘அக்சய திரிதியை புனித நாளான இன்று, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.19000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். முதல் முறையாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய உள்ளனர்’ என குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுநோயின் கடினமான சவால்களுக்கு மத்தியில், விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். அதேசமயம், அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 10 சதவீதம் கூடுதல் கோதுமை வாங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X