என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் பலத்த மழை- 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
Byமாலை மலர்14 May 2021 7:43 AM GMT (Updated: 14 May 2021 7:43 AM GMT)
தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி “தாக்டே” புயல் உருவாகி உள்ளது.
இதனால் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், ஆழப்புழா உள்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று (14-ந் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுள்ளது.
இதேபோல் நாளையும் (15-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்டே புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் ஆற்றோரம் மற்றும் பிற நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 9 மாவட்டங்களில் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி “தாக்டே” புயல் உருவாகி உள்ளது.
இதனால் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், ஆழப்புழா உள்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதேபோல் நாளையும் (15-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்டே புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் ஆற்றோரம் மற்றும் பிற நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 9 மாவட்டங்களில் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X