என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
18 மாநிலங்களில் தினசரி பாதிப்பு சரிவு - கொரோனா 2-வது அலை குறைவதாக மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்11 May 2021 8:47 PM GMT (Updated: 11 May 2021 8:47 PM GMT)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இறங்குமுகம் காட்டத் தொடங்கி இருக்கிறது.
நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தினசரி பாதிப்பில் கணிசமான சரிவைக் காண முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் அது நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும்.
இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டில் தினசரி பாதிப்பு, இறப்பு குறைந்து வருவதற்கான ஆரம்ப போக்கைப் பார்க்க முடிகிறது. மராட்டியம், உத்தர பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் கர்நாடகம், கேரளா, தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் போக்கைக் காண முடிகிறது.
13 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
26 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 2 மாதங்களாக ஏறுமுகத்தில் சென்றது. தற்போது அது இறங்குமுகம் காணத்தொடங்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இறங்குமுகம் காட்டத் தொடங்கி இருக்கிறது.
நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தினசரி பாதிப்பில் கணிசமான சரிவைக் காண முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் அது நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும்.
இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டில் தினசரி பாதிப்பு, இறப்பு குறைந்து வருவதற்கான ஆரம்ப போக்கைப் பார்க்க முடிகிறது. மராட்டியம், உத்தர பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் கர்நாடகம், கேரளா, தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் போக்கைக் காண முடிகிறது.
13 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
26 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 2 மாதங்களாக ஏறுமுகத்தில் சென்றது. தற்போது அது இறங்குமுகம் காணத்தொடங்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X