என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டோஸ்-க்கு முன்னுரிமை வழங்கவும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Byமாலை மலர்11 May 2021 11:36 AM GMT (Updated: 11 May 2021 11:36 AM GMT)
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், 2-வது டோஸ்க்கான நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதன்முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட, 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ள இந்திய பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் அச்சமாக இருந்தனர். இந்தியாவில் கொரோனா 2-வது அலை சூறாவளியாக கிளம்ப, தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.
இதனால் எல்லா மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட நாட்களில் 2-வது டோஸ் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் முதல் டோஸ்க்கு லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முதல் டோஸ் செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்த முன்னுரிமைய அளிக்க வேண்டும். மத்திய அரசு இதற்காக 70 சதவீத டோஸ்களை வழங்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
மே 15 முதல் 31-ந்தேதி வரைக்கான தடுப்பூசிகள் 14-ந்தேதி அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை 17,27,10,066 தடுப்பூசி டோஸ்கள் 25,15,519 செசன்ஸ் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
45 வயது முதல் 60 வயதினருக்கு 5,55,10,630 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 71,95,632 2-வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5,38,06,205 முதல் டோஸ், 1,56,60,702 2-வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,24,731 டோஸ் 18 வயது முதல் 44 வயதினருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 25,59,339 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X