என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் துணை சிறைச்சாலையில் உள்ள 21 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்11 May 2021 9:54 AM GMT (Updated: 11 May 2021 9:54 AM GMT)
உதாலா துணை சிறைச்சாலையில், கடந்த சனிக்கிழமையன்று சிறைக்கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புவனேஸ்வர்:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 9,793 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உதாலா துணை சிறைச்சாலையில், கடந்த சனிக்கிழமையன்று சிறைக்கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிலருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உதாலா நகர மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து 79 சிறைக்கைதிகளுக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உதாலா சிறையின் நிர்வாக அதிகாரி வித்யாதர் தண்டபாத் கூறுகையில், “தொற்று பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். தேவைப்பட்டால் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பிவைப்போம். சிறைச்சாலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X