search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் சற்றே குறைந்த கொரோனா: 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி - 65 பேர் பலி

    கேரளாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பரவல் மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 4 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தாக்குதலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 99 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×