என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-ம் அலைக்குத் தயாராக இருக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
Byமாலை மலர்10 May 2021 5:20 PM GMT (Updated: 10 May 2021 5:20 PM GMT)
கூடுதல் தடுப்பூசிகளைத் தரக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் ஜிடிபி மருத்துவமனை அருகே உள்ள கொரோனா சேவை மையத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
3, 4 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசியை விநியோகிக்கக் கோரி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால், மத்திய அரசே தடுப்பூசியை வழங்குகிறது என நினைக்கிறோம். ஒரு மாதத்தில் கிடைக்கப்பெறவுள்ள தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசிடமிருந்து எங்களுக்குக் கடிதம் கிடைத்துள்ளது. கூடுதல் தடுப்பூசிகளைத் தரக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கிறோம். 3-ம் அலைக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 28 ஆயிரத்தைத் தொட்டது.
இந்த அளவின் அடிப்படையில் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். அடுத்த அலையில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தொட்டால்கூட எங்களால் எதிர்கொள்ள முடியும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X