என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிணங்களை தோண்டி எடுத்து துணிகளை திருடிய கும்பல்- 7 பேரை கைது செய்த போலீஸ்
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பகாபத்தில் சிலர் பிணங்களை தோண்டி எடுத்து துணிகளை திருடி விற்று வந்தனர்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பரவியது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஒரு கும்பலே இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிணங்களை புதைத்ததும் இவர்கள் சென்று அதை தோண்டி எடுப்பார்கள். உடலில் போர்த்தப்பட்ட புது துணிகள், சேலைகள், ஆடைகளை எடுத்து சென்று விடுவார்கள்.
பின்னர் அதை சுத்தம் செய்து புதிய துணி போல மாற்றி முக்கிய ஆடை நிறுவனத்தின் முத்திரைகளை பதித்து விற்பனை செய்து விடுவார்கள். அந்த கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 520 போர்வைகள், 127 குர்தாக்கள், 52 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது கொரோனா காலம் என்பதால் கொரோனா நோயாளிகளையும் புதைக்திருக்கிறார்கள். அவர்கள் உடலையும் தோண்டி எடுத்து திருடி இருக்கலாம் என கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்