என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தா அமைச்சரவையில் 43 பேர்... ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்
Byமாலை மலர்10 May 2021 5:55 AM GMT (Updated: 10 May 2021 5:55 AM GMT)
மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஜக்தீப் தங்கார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 5ம் தேதி மம்தா நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
அப்போது, அமைச்சரவையில் இடம்பெறும் 43 பேர் பதவியேற்றனர். முன்னாள் மந்திரி அமித் மித்ரா காணொளி வாயிலாக பதவியேற்றார். அனைவருக்கும் ஆளுநர் ஜக்தீப் தங்கார் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மம்தா அமைச்சரவையில் பல்வேறு புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X