search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மந்திரி சுரேஷ்குமார் வேண்டுகோள்

    கொரோனா பரவலின் சங்கிலியை முறிக்க சுகாதாரத்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதனால் பொதுமக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.
    பெங்களூரு

    பெங்களூரு ராஜாஜிநகரில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை மையத்தை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் திறந்து வைத்த பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கின் பின்னணியில் உள்ள நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்பு கொரோனா பரவல், நகரங்களில் மட்டுமே இருந்தது. இப்போது இந்த வைரஸ் கிராமங்களுக்கும் பரவிவிட்டது. அதை கட்டுப்படுத்த கடினமான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டியது அவசியம். கொரோனா பரவலின் சங்கிலியை முறிக்க சுகாதாரத்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதனால் பொதுமக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

    கர்நாடக அரசு, ஆக்சிஜனை அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் இந்த ஆக்சிஜன் பிரச்சினை முடிவுக்கு வரும். ஆக்சிஜன் பயன்பாட்டை மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து தணிக்கை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×