search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 273 பேர் பலி

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், கடந்த சில நாட்களாக சற்று குறைவாக பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 13,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,23,567 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 273 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,344 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12,17,991 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 86,232 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×