search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் சிலிண்டர்
    X
    ஆக்சிஜன் சிலிண்டர்

    தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிப்பு

    தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
    ஸ்டாலின்- மோடி
    அவரது கோரிக்கையை ஏற்று 220 டன்னாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஆக்ஸிஜன் அளவை 419 டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    Next Story
    ×