என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஆர்டிஓ தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு
Byமாலை மலர்8 May 2021 10:29 AM GMT (Updated: 8 May 2021 10:29 AM GMT)
பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்தை தண்ணீரில் கரைத்து நோயாளிகளை குடிக்கச் செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையாத நிலையில், மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடும் சுகாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்கின்றன.
இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.
டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளன.
இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஆக்சிஜன் செலுத்தவேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. இதனையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X