search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் - பிரதமர் மோடி
    X
    முக ஸ்டாலின் - பிரதமர் மோடி

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு

    மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேச மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி, கொரோனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்தார்.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10ந்தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இந்த சூழலில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    முன்னதாக, மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேச மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி, கொரோனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்தார்.

    Next Story
    ×