search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியாகாந்தி
    X
    சோனியாகாந்தி

    அனைத்துக்கட்சி கூட்டத்தை அவசரமாக கூட்டுங்கள்: மத்திய அரசுக்கு சோனியா வலியுறுத்தல்

    நாட்டின் கொரோனா நிலைமை பற்றி விவாதிப்பதற்கு மத்தியில் உள்ள மோடி அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    நாடு கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து மீள்வதற்காக போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் இந்தக் கூட்டம் நடந்தது நேற்று முதல் முறை ஆகும்.

    இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் கொரோனா நிலைமை பற்றி விவாதிப்பதற்கு மத்தியில் உள்ள மோடி அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து சிறப்பாகப் போராடுவதற்கு கூட்டு நடவடிக்கை மற்றும் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களையும் கூட்ட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மிகவும் ஏமாற்றம் தருகின்றன. இது எதிர்பாராத ஒன்று ஆகும். இந்த முடிவுகள் குறித்து விவாதிப்பதற்கு விரைவில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×