என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனா நோயாளிகளிடம் பரவும் பூஞ்சை தொற்று
புதுடெல்லி:
கொரோனா நோயாளிகளிடம் ஒருவித பூஞ்சை தொற்று ஏற்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பல நோயாளிகள் இந்த தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். முகோர்மைசிசீஸ் எனப்படும் பூஞ்சையால் இந்த தொற்று ஏற்படுகிறது.
இது ஆபத்தை விளைவிக்க கூடியதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது இந்த பூஞ்சை அவர்களையும் தொற்றி கொள்கிறது.
இதுவே சிலருடைய உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாக பிரபல நிபுணர் மணீஸ் முஞ்சால் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவிய போதும் சிலரை இந்த பூஞ்சை தாக்கி இருந்தது. ஆனால் இப்போது இதன் பரவல் அதிகமாக காணப்படுகிறது.
இந்த பூஞ்சை பாதிப்பால் சிறுநீரகம், இதயம் போன்றவையும் பாதிக்கப்படும். கண் பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். எலும்பு மச்சையிலும் பாதிப்பை உருவாக்கும் என்று டாக்டர்கள் கூறினர்.
கன்னங்களில் வீக்கம், தீவிர மூக்கடைப்பு, கண்ணில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் இந்த பூஞ்சை பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதற்கு உரிய சிகிச்சைகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்