search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பாதிப்பு
    X
    கொரோனா பாதிப்பு

    வைரஸ் தொற்றுக்கு 328 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 49,058 பேருக்கு கொரோனா

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்று சற்று குறைந்து 50 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 64 ஆயிரத்து 441 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 49 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 90 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 328 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 212 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் ஒரே நாளில் 18 ஆயிரத்து 943 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் 12 லட்சத்து 55 ஆயிரத்து 797 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 17 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 23,706 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாகல்கோட்டையில் 655 பேர், பல்லாரியில் 922 பேர், பெலகாவியில் 843 பேர், பெங்களூரு புறநகரில் 933 பேர், பீதரில் 336 பேர், சாம்ராஜ்நகரில் 707 பேர், சிக்பள்ளாப்பூரில் 609 பேர், சிக்கமகளூருவில் 452 பேர், சித்ரதுர்காவில் 126 பேர், தட்சிண கன்னடாவில் 1,191 பேர், தாவணகெரேயில் 672 பேர், தார்வாரில் 824 பேர், கதக்கில் 191 பேர், ஹாசனில் 1,403 பேர், ஹாவேரியில் 236 பேர், கலபுரகியில் 1,652 பேர், குடகில் 697 பேர், கோலாரில் 756 பேர், கொப்பலில் 357 பேர், மண்டியாவில் 1,301 பேர், மைசூருவில் 2,531 பேர், ராய்ச்சூரில் 819 பேர், ராமநகரில் 413 பேர், சிவமொக்காவில் 635 பேர், துமகூருவில் 2,418 பேர், உடுப்பியில் 1,526 பேர், உத்தரகன்னடாவில் 734 பேர், விஜயாப்புராவில் 662 பேர், யாதகிரியில் 721 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 139 பேரும், பல்லாரியில் 26 பேரும், பெங்களூரு புறநகரில் 8 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ்நகரில் 5 பேரும், துமகூருவில் 14 பேரும், சிவமொக்காவில் 16 பேரும், ஹாசனில் 9 பேரும், ராமநகரில் 9 பேரும்,

    பாகல்கோட்டையில் 7 பேரும், சிக்பள்ளாப்பூரில் 3 பேரும், தார்வாரில் 6 பேரும், ஹாவேரியில் 3 பேரும், கலபுரகியில் 14 பேரும், மைசூருவில் 18 பேரும், விஜயாப்புராவில் 6 பேரும், உத்தரகன்னடாவில் 6 பேரும், உடுப்பியில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், மண்டியாவில் 2 பேரும், குடகில் 12 பேரும் என இவர்கள் உள்பட 328 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்று சற்று குறைந்து 50 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
    Next Story
    ×