search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியாகாந்தி
    X
    சோனியாகாந்தி

    காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

    கொரோனா இரண்டாவது அலை நிலவரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    புதுடெல்லி :

    நாட்டில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி விட்டது. மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில், கொரோனா இரண்டாவது அலை நிலவரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி திட்டமிட்டுள்ளார்.

    இந்த ஆலோசனை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலமாக கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் முடிந்த பிறகு நடக்கும் முதலாவது காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இதுவாகும். சமீபத்திய, 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த பிறகு உட்கட்சி கூட்டம் நடப்பது இதுவே முதல்முறை ஆகும்.
    Next Story
    ×