என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவை சுழற்றி அடிக்கும் கொரோனா: 50,112 பேர் பாதிப்பு- 346 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்5 May 2021 2:17 PM GMT (Updated: 5 May 2021 2:17 PM GMT)
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்இந்தியாவில் கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை மூன்று மாநிலங்களும் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தொற்று கட்டுக்குள் வரவில்லை.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி, 50,112 ஆக பதிவாகியுள்ளது. மகாரஷ்டிராவிற்குப் பிறகு 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலமாக கர்நாடகா உள்ளது.
26,841 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 346 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 4,87,288 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 17,41,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X