என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 37,190 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்4 May 2021 12:34 PM GMT (Updated: 4 May 2021 12:34 PM GMT)
கேரளாவில் இன்னும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் அதிரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மாநிலங்களில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தொற்றை சிறப்பான வகையில் கட்டுப்படுத்தியது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கேரளாவில் கொரோனா தொற்று அத்துமீறி சென்றது. அதன்பின் மகாராஷ்டிராவிற்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் கேரள இருந்து வந்தது. தற்போது இந்தியா அளவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலும் உச்சத்தில் இருக்கிறது.
இன்று கேரள மாநிலத்தில் புதிதாக 37,190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 26,148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை 13,39,257 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,56,872 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X