என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி, அமித்ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல: சிவசேனா
Byமாலை மலர்4 May 2021 1:58 AM GMT
அனைத்து அரசு எந்திரங்களும், பண பலமும், தொழில்நுட்பங்களும் தங்களது வசம் இருந்தாலும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.
மும்பை :
மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இதில் மேற்கு வங்காள தேர்தல் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
5 மாநில தேர்தலில் அனைவரது கண்களும் மேற்கு வங்கத்தின் மீது தான் இருந்தது. பொங்கி எழுந்த கொரோனா நோயை கையாளும் பணியை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரதமர் மோடி உள்பட முழு மத்திய ஆட்சியாளர்களும் மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க மும்முரமாக வேலை செய்தனர்.
இருப்பினும் பா.ஜனதா கொடுத்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி கண்டுள்ளார்.
அனைத்து அரசு எந்திரங்களும், பண பலமும், தொழில்நுட்பங்களும் தங்களது வசம் இருந்தாலும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.
மேற்கு வங்கத்தை வெல்லும் ஒரே நோக்கத்துடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் களத்தில் நுழைத்து கொரோனா தடுப்பு விதிகளை புறம்தள்ளிவிட்டு பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்காளத்தில் நீண்டகாலமாக பிரசாரம் செய்தது கொரோனா பரவ காரணமாக இருந்ததாக சென்னை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது.
மேற்கு வங்க தேர்தல் முடிவை பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் பா.ஜனதா தோற்றுள்ளது, கொரோனா வென்றுள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள். அசாம் மற்றும் புதுச்சேரியை தவிர வேறு எங்கும் பா.ஜனதா சிறப்பாக செயல்படவில்லை.
மேற்கு வங்காள மக்கள் ஒரு செயற்கை அலைக்கு இரையாகாமல் இருந்ததற்கும், தங்களின் சொந்த கவுரவத்திற்காக ஒற்றுமையாக நின்றதையும் பாராட்ட வேண்டும். இந்த நாடு மேங்கு வங்காளத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இதில் மேற்கு வங்காள தேர்தல் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
5 மாநில தேர்தலில் அனைவரது கண்களும் மேற்கு வங்கத்தின் மீது தான் இருந்தது. பொங்கி எழுந்த கொரோனா நோயை கையாளும் பணியை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரதமர் மோடி உள்பட முழு மத்திய ஆட்சியாளர்களும் மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க மும்முரமாக வேலை செய்தனர்.
இருப்பினும் பா.ஜனதா கொடுத்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி கண்டுள்ளார்.
அனைத்து அரசு எந்திரங்களும், பண பலமும், தொழில்நுட்பங்களும் தங்களது வசம் இருந்தாலும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.
மேற்கு வங்கத்தை வெல்லும் ஒரே நோக்கத்துடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் களத்தில் நுழைத்து கொரோனா தடுப்பு விதிகளை புறம்தள்ளிவிட்டு பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்காளத்தில் நீண்டகாலமாக பிரசாரம் செய்தது கொரோனா பரவ காரணமாக இருந்ததாக சென்னை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது.
மேற்கு வங்க தேர்தல் முடிவை பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் பா.ஜனதா தோற்றுள்ளது, கொரோனா வென்றுள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள். அசாம் மற்றும் புதுச்சேரியை தவிர வேறு எங்கும் பா.ஜனதா சிறப்பாக செயல்படவில்லை.
மேற்கு வங்காள மக்கள் ஒரு செயற்கை அலைக்கு இரையாகாமல் இருந்ததற்கும், தங்களின் சொந்த கவுரவத்திற்காக ஒற்றுமையாக நின்றதையும் பாராட்ட வேண்டும். இந்த நாடு மேங்கு வங்காளத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X