என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் முடிந்த 5 மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம்
Byமாலை மலர்4 May 2021 1:25 AM GMT (Updated: 4 May 2021 1:25 AM GMT)
சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
புதுடெல்லி:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இவற்றில் அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியிருந்தது. அதன்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும், பணம், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் பறக்கும் படைக்கு வழங்கப்பட்டு இருந்தது.
தேர்தலில் முறைகேடாக பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், 5 மாநில தேர்தல் நடந்து முடிந்து கடந்த 2-ம் தேதி அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. அதன் முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்தன.
இதனை தொடர்ந்து தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளை நீக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இவற்றில் அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியிருந்தது. அதன்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும், பணம், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் பறக்கும் படைக்கு வழங்கப்பட்டு இருந்தது.
தேர்தலில் முறைகேடாக பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், 5 மாநில தேர்தல் நடந்து முடிந்து கடந்த 2-ம் தேதி அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. அதன் முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்தன.
இதனை தொடர்ந்து தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளை நீக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X