என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடுப்பூசிக்கு புதிய ஆர்டர் கொடுக்கவில்லை என்பது உண்மையல்ல -சுகாதாரத்துறை
Byமாலை மலர்3 May 2021 10:29 AM GMT (Updated: 3 May 2021 10:29 AM GMT)
கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு ஆர்டர் கொடுக்கவில்லை என்று செய்தி வெளியானது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவேக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரித்து வருகின்றன.
இந்த நிறுவனங்களுக்கு அரசு ஆர்டர் கொடுத்திருந்த மருந்துகளை இந்த மாதம் மத்தியில் சப்ளை செய்து முடித்துவிடுவோம் என்று மருந்து நிறுவனங்கள் கூறி உள்ளன. மேலும் மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு இதுவரை ஆர்டர் கொடுக்கவில்லை என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலை மறுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பூசிகளுக்கு புதிய ஆர்டரை மத்திய அரசு கொடுக்கவில்லை என்ற ஊடக தகவல்கள் முற்றிலும் தவறானவை என கூறி உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி சப்ளைக்காக கடைசியாக கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆர்டரில் மே 3ம் தேதி வரை 8.744 கோடி டோஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு, 5 கோடி கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களுக்காக ரூ.787.50 கோடி பாரத் பயோடெக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X