என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் - ராகுல் காந்தி அறிவிப்பு
Byமாலை மலர்2 May 2021 10:07 PM GMT (Updated: 2 May 2021 10:07 PM GMT)
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது.
புதுடெல்லி:
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி, போட்டியிட்ட தொகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது.
குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ள அந்த கட்சி புதுச்சேரி, அசாமிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. மேலும் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிட்ட மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்துள்ளது.
இது கட்சியினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த தேர்தல் களத்தில் எங்களுக்கு ஆதரவை வழங்கியவர்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் உண்மையிலேயே நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் மதிப்பீடுகள் மற்றும் லட்சியங்களுக்காக தொடர்ந்து போராடுவோம். ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி, போட்டியிட்ட தொகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது.
குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ள அந்த கட்சி புதுச்சேரி, அசாமிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. மேலும் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிட்ட மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்துள்ளது.
இது கட்சியினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த தேர்தல் களத்தில் எங்களுக்கு ஆதரவை வழங்கியவர்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் உண்மையிலேயே நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் மதிப்பீடுகள் மற்றும் லட்சியங்களுக்காக தொடர்ந்து போராடுவோம். ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X