என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெற்றியை கொண்டாடவேண்டிய நேரம் இதுவல்ல -பினராயி விஜயன்
Byமாலை மலர்2 May 2021 12:41 PM GMT (Updated: 2 May 2021 12:41 PM GMT)
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய நேரம் இது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலையில் உள்ளது.
141 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஆட்சியமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாலை 5 மணி நிலவரப்படி இடதுசாரி கூட்டணி 96 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.
இந்த வெற்றி குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:
இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளா தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், கொரோனா தொடர்ந்து பரவி வருவதால் இது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நேரம் அல்ல. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய நேரம்.
கேரளாவில் இன்று 31,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X