என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் கொரோனா தொற்றை முறியடித்த பச்சிளம் குழந்தை
Byமாலை மலர்1 May 2021 10:56 PM GMT (Updated: 1 May 2021 10:56 PM GMT)
உத்தர பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றை முறியடித்துள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று கொரோனா பாதித்த தாயிடம் இருந்து தொற்று ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்துள்ளது.
இதுபற்றி டாக்டர் கூறும்பொழுது, பிரசவத்திற்கு முன்பு தாய்க்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. பிரசவம் முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு 8 நாள் ஆன நிலையில் தொற்று பரவி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. எனினும், 15 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததில் குழந்தை கொரோனா பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ளது.
இதனால், குழந்தையை நாங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 15 நாட்களில் எதிர்ப்பு சக்தி கிடைத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது.
எனவே, புதிதாக பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உடனடியாக உருவாகி, நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைத்து தொற்றில் இருந்து விடுபட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று கொரோனா பாதித்த தாயிடம் இருந்து தொற்று ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்துள்ளது.
இதுபற்றி டாக்டர் கூறும்பொழுது, பிரசவத்திற்கு முன்பு தாய்க்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. பிரசவம் முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு 8 நாள் ஆன நிலையில் தொற்று பரவி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. எனினும், 15 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததில் குழந்தை கொரோனா பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ளது.
இதனால், குழந்தையை நாங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 15 நாட்களில் எதிர்ப்பு சக்தி கிடைத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது.
எனவே, புதிதாக பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உடனடியாக உருவாகி, நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைத்து தொற்றில் இருந்து விடுபட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X