என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரம் வெளியீடு - சிபிஎஸ்இ அறிவிப்பு
Byமாலை மலர்1 May 2021 8:26 PM GMT (Updated: 1 May 2021 8:26 PM GMT)
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தேர்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தேர்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கொரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தேர்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தேர்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தேர்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கொரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தேர்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X