search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் இருந்து இறக்கப்படும் தடுப்பூசி மருந்து
    X
    விமானத்தில் இருந்து இறக்கப்படும் தடுப்பூசி மருந்து

    முதல்கட்டமாக 1.50 லட்சம் டோஸ்... இந்தியாவுக்கு வந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

    இந்த மாத இறுதியில் மேலும் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்புசி மருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐதராபாத்:

    இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது வரை இந்தியாவில் 15 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதில் இருந்து 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி இருக்கிறது.

    இதனால் அதிக தடுப்பூசி தேவைப்படுகிறது. அதற்கு போதுமான அளவிற்கு தற்போது போடப்படும் 2 தடுப்பூசிகளின் சப்ளை இல்லை. எனவே வேறு தடுப்பூசிகளையும் வாங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை வழங்க அந்த நாட்டு அரசு முன்வந்தது. இது சம்பந்தமாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசினார்.

    ஐதராபாத்துக்கு வந்து சேர்ந்த மருந்து

    இந்தியாவின் அவசர தேவை கருதி உடனடியாக தடுப்பூசி மருந்தை வழங்குவதாக ரஷியா அறிவித்தது. அதன்படி இன்று விமானத்தில் தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்தது. முதற்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் மருந்துகள் ஐதராபாத் வந்து சேர்ந்தன. இந்த மாத இறுதியில் மேலும் 30 லட்சம் டோஸ் மருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூன் மாதத்தில் சுமார் 50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி மருந்து இந்தியா வர உள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி மருந்தை ரெட்டி லேபரெட்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுபோக மேலும் 5 நிறுவனங்கள் ஸ்புட்னிக் மருந்தை இந்தியாவில் தயாரிக்க முயற்சித்து வருகின்றன. அவை அனைத்தும் தயாரிப்புகளை தொடங்கும் போது இந்தியாவில் தாராளமாக ஸ்புட்னிக் மருந்துகள் கிடைக்கும்.
    Next Story
    ×