என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு - சுகாதார மந்திரி தகவல்
Byமாலை மலர்1 May 2021 12:23 AM GMT (Updated: 1 May 2021 12:39 AM GMT)
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை:
மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை மக்களை வதைத்து வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கும் வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நிபுணர்கள் கூறுவதை பார்க்கும் போது மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 3-வது கொரோனா அலை ஏற்படலாம். மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவற்றில் தற்சார்புடன் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. மே இறுதியில் கொரோனா பாதிப்பு குறையலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜூலை, ஆகஸ்ட்டில் 3-வது அலை ஏற்பட்டால் அது மாநில நிர்வாகத்திற்கு உள்ள சவாலை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் 3-வது கொரோனா அலையை தடுக்க தடுப்பூசி போட்டு முடிக்கப்பட வேண்டும், என்றார்.
இதேபோல 3-வது அலை உருவானால் அதை எதிர்கொள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கவும், மருந்துகளை போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை மக்களை வதைத்து வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கும் வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நிபுணர்கள் கூறுவதை பார்க்கும் போது மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 3-வது கொரோனா அலை ஏற்படலாம். மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவற்றில் தற்சார்புடன் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. மே இறுதியில் கொரோனா பாதிப்பு குறையலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜூலை, ஆகஸ்ட்டில் 3-வது அலை ஏற்பட்டால் அது மாநில நிர்வாகத்திற்கு உள்ள சவாலை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் 3-வது கொரோனா அலையை தடுக்க தடுப்பூசி போட்டு முடிக்கப்பட வேண்டும், என்றார்.
இதேபோல 3-வது அலை உருவானால் அதை எதிர்கொள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கவும், மருந்துகளை போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X