search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார குழுவினர்
    X
    பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார குழுவினர்

    புதிய தொற்று 3.86 லட்சமாக உயர்வு, 3498 பேர் மரணம்... இந்தியாவில் கொரோனா நிலவரம்

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31.70 லட்சமாக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பரிசோதனை

    நேற்று முன்தினம் 3645 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்த நிலையில், நேற்று உயிரிழப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3498 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,330 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,97,540 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 31,70,228 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 15,22,45,179 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×