என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கை: முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
Byமாலை மலர்29 April 2021 3:18 PM GMT (Updated: 29 April 2021 3:18 PM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும், இந்தியாவுக்கு பல வெளிநாடுகள் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் முக்கிய துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்து உள்ளிட்டவற்றை அதிகப்படுத்துவது, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X