search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
    X
    வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

    மேற்கு வங்கத்தில் 7ம் கட்ட தேர்தல் -1.30 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

    மேற்கு வங்காளத்தில் 7ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
    கொல்கத்தா:

    294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுகிறது. இதில் 6 கட்டங்களாக மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    தேர்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தீவிரமாக பரவி வருவதால், வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அனைவரும் முக கவசம் அணிந்தே வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வாக்களிப்பதற்காக மக்கள் கூடினர். இதனால் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

    அபிஷேக் பானர்ஜி

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, கொல்கத்தா மித்ரா கல்வி நிலையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியமைப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் இறந்துகொண்டிருக்கும் நிலையில், தேர்தல் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    மதியம் 1.30 மணி நிலவரப்படி, 55.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 58.96 சதவீதம், தெற்கு கொல்கத்தாவில் 41.69 சதவீதம், மால்டாவில் 58.16 சதவீதம், முர்ஷிதாபாத்தில் 60.53 சதவீதம், மேற்கு பர்தமானில் 50.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இன்றைய தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 268 பேர் களத்தில் உள்ளனர். 
    Next Story
    ×