என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்
Byமாலை மலர்25 April 2021 10:56 AM GMT (Updated: 25 April 2021 10:56 AM GMT)
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்காக டெண்டர் கோரப்படும் என்று மந்திரி நவாப் மாலிக் தெரிவித்தார்.
மும்பை:
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையானது நான்காவது நாளாக 3 லட்சத்தை தாண்டி உள்ளது. மகாராஷ்டிராவில் அதிக அளவிலான தொற்று பதிவாகிறது. கடந்த தின தினங்களாக தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாநில மந்திரி நவாப் மாலிக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்காக டெண்டர் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X